Close
மே 20, 2024 2:13 மணி

அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக உடற்கல்வி பாட புத்தகங்களை அரசே வழங்கிட வேண்டும்

புதுக்கோட்டை

தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் மாநில பொது குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் விஜய்

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர் களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக உடற்கல்வி பாட புத்தகங்களை அரசே வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு பட்டயச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்  விஜய்.

தமிழ்நாடு பட்டியச் சான்றிதழ் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய ஓய்வினை திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசாணை 177 -இல் உள்ள முதலாவது இரண்டாவது என்கின்ற படிநிலையை கலைந்து அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் தங்களது பணி காலத்தில் இரண்டு ஊக்க ஊதியம் பெற்றிடும் வகையில் அரசாணையை திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை அடுத்து மாநிலத் தலைவர் விஜய் செய்தியாளர் களிடம்  கூறியதாவது: ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை யிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக உடற்கல்வி பாடப் புத்தகங்களை அரசே வழங்கிட வேண்டும்.

அரசாணை 177 -இல் உள்ள முதலாவது இரண்டாவது என்கின்ற படிநிலையை கலைந்து அனைத்து உடற்கல்வி ஆசிரியர் களும் தங்களது பணி காலத்தில் இரண்டு ஊக்க ஊதியம் பெற்றிடும் வகையில் அரசாணையை திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

ஆண்டு தரும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உழைப்பே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top