Close
மே 20, 2024 12:57 மணி

புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் புதிய உதயமான மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி யை தொடக்கி வைத்த நகரச்செயலர் ஆ. செந்தில்

புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி  உதயமா கியுள்ளது.
 புதுக்கோட்டை கணேஷ்நகர் 5-ஆம் வீதியில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி குழந்தைகள்  மாணவ, மாணவியருக்கான    செஸ் விளையாட்டு பயிற்சி நிறுவனம் திறப்பு விழா  நடைபெற்றது.
தொழில் அதிபர் சையது முகமது தலைமை வகித்தார்.   திமுக  நகர செயலாளர்  ஆ செந்தில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு செஸ் அகாடமி பிரிவை  தொடக்கி வைத்து வாழ்த்தினார்.
நிகழ்வில்  ,  வனத்தோட்ட கழகம்     ஜோசப் ஆரோக்கிக்யராஜ் ஜெயராணி, பள்ளி முதல்வர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரைபாலு, பிரேம் ஆனந்த்  மாஸ்டர்ஸ் செஸ்அகாடமி,பி.சேதுராமன், சபிபுல்லா இக்பால்,  சமூக ஆர்வலர்கள்  மற்றும் சர்வதேச சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர்.
செஸ் விளையாட்டு வீரர்  கவிரூபன் மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு விருதுகளை பெற்றதை பாராட்டி திமுக நகர செயலாளர்   ஆ செந்தில்   ஊக்க தொகை வழங்கி பாராட்டினார்.
மாஸ்டர்ஸ் செஸ் அகாடமியின் நிறுவனர் வே. பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார் முடிவில் செஸ் அகாடமி, மாஸ்டர்ஸ் பி.சேதுராமன் நன்றி கூறினார். இதில் செஸ் விளையாட்டு வீரர்   பெற்றோர்கள்  சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top