Close
மே 20, 2024 3:15 மணி

புதுக்கோட்டை கம்பன் விழாவுக்கு ஆளுநர் ரவி வருகை ரத்து: தமுஎகச வரவேற்பு

புதுக்கோட்டை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்

புதுக்கோட்டைக்கு வருவதாக இருந்து தமிழ்நாடு ஆளுநரின் வருகையை ரத்துசெய்து கம்பன் கழகம் வேறு அழைப்பிதழ் வெளியிட்டதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி.ஜெயபாலன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக்கொடி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொள்வதாக அழைப்பிதழ் வெளியானது.  தமிழ் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் எதிரான நிலைப்பாட்டினையும், சனாதனத்திற்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து மேடைகளில் வெளிப்படுத்தி வரும் ஆளுநரின் வருகைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது. இதன் ஒருபகுதியாக கம்பன் விழா நிகழ்வுகளில்  கலந்துகொள்வதில்லை தமுஎகசவும் முடிவெடித்திருந்தது.

இந்நிலையில், ஆளுநரின் வருகையை ரத்துசெய்து வேறு அழைப்பிதழை கம்பன்கழக நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். இதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. இதனைத் தொடர்ந்து கம்பன் விழா நிகழ்வுகளில் பங்கேற்க அழைக்கப்பட்ட தமுஎகச-வினர் பங்கேற்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top