Close
மே 20, 2024 8:40 மணி

பெருந்துறையில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா

ஈரோடு

பெருந்துறையில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தோப்புவெங்கடாசலம் பங்கேற்று மரியாதை செய்தார்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் 121-ஆம் பிறந்தநாளை  அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஈரோடு மாவட்ட கிளை ஆகியவை  இணைந்து  கொண்டாடினர்.

பெருந்துறை (வடக்கு) அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு, கர்மவீரர் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், மாவட்ட கவுன்சிலர் ஏ.வி. பாலகிருஷ்ணன், யூனியன் கவுன்சிலர் நவபாரதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நேரு, சரவணன், கோகுல், பிரபாவதி நல்ல சிவம், சரண்யா சுரேஷ், துரைராஜ்,சோளி சக்திவேல், நாகராஜ்,ராயல் குமார், குருசாமி, தங்கமுத்து, குட்டி, குணசேகர், மகேந்திரன், பள்ளி ஆசிரியர்கள், நாடார் சமுதாயத்தினர் மற்றும் வணிகர் சங்க பேரவை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top