Close
மே 20, 2024 7:28 மணி

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெனிக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெனிக் கல்லூரி மாணவிக்குபாராட்டு தெரிவித்த கல்லூரி நிர்வாகிகள்

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெனிக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு  தெரிவிக்கப்பட்டது.

சுதந்திரத் தின  விழாவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயின்று வரும் மாணவி பி.சுவேதா ,”ஒரே முட்டை ஓட்டில் ஆறு தேசிய தலைவர்களை ” குறைந்த நேரத்தில் வரைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மாணவியின் இந்த சாதனை கலாம்  உலக சாதனை -ஆல் அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனைக்கான சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.

கல்லூரியின் செயலாளர் பி..கருப்பையா, பொருளாளர் ஆர்எம்.வி.  கதிரேசன்  ஆகியோர் மாணவிக்கு கேடயம் வழங்கி பாராட்டினர்.

நிகழ்வில் முதல்வர் ஜீவானந்தம், கல்வியல் கல்லூரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் திருமலை அரசன், துறை பேராசிரியர்கள்  ஆகியோர் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top