Close
மே 20, 2024 7:28 மணி

அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடக்கம்

தமிழ்நாடு

மாணவர் நேரடி சேர்க்கை ஆக.21 -ல் தொடக்கம்

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 ல் தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது.

இந் நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது.

மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.trgas.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”– என்ற தொகுப்பில் காணலாம் என உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top