Close
மே 17, 2024 7:51 மணி

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் பேசிய சிபிஎம் மாவட்டச்செயலர் எஸ். கவிவர்மன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு நகரச்செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.

முன்னதாக நகரக் குழு உறுப்பினர் ஆர்.நிரஞ்சனா வரவேற்க, நகரக் குழு உறுப்பினர் பழ.குமரேசன் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top