Close
மே 18, 2024 4:33 காலை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிபிஎம் கட்சி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா

புதுக்கோட்டை

சிபிஎம் கட்சி சார்பில் திருவள்ளூர் நாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் செவ்வாய்க் கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவிற்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் ஆர்.நிரஞ்சனாதேவி தலைமை வகித்தார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சு.மதியழகன், துரை.நாராயணன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், கட்சியின் நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், பழ.குமரேசன், எம்.ஏ.ரகுமான், வாலிபர் சங்க நகரச் செயலாளர் தீபக், வழங்கறிஞர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top