Close
மே 18, 2024 9:51 காலை

புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பாடியில் மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை

திருவாப்பாடியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

திருவாப்பாடி கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு 69- ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு 69-ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது,

இந்த போட்டியில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது இதில் புதுக்கோட்டை, மதுரை,தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100 -க்கும் மேற்ப்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

மாட்டு வண்டி ஜோடிகள் நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்து ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத் துடன் கண்டு ரசித்தனர்.

மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூபாய்2 லட்சத்தி 82 ஆயிரம் ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. மணமேல்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top