Close
மே 18, 2024 1:17 மணி

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை போக்குவரத்துப் பணிமனை முன்பாக சிஐடியு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாயிற்கூட்டம்

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை விளக்கி புதுக்கோட்டை போக்குவரத்துப் பணிமனை முன்பாக சிஐடியு சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை வாயிற்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு சம்மேளன துணை பொதுச் செயலாளர் ஏ.கனகசுந்தர் விளக்கவுரை யாற்றினார்.

போக்குவரத்துக்கழக முன்னாள் நிர்வாக இயக்குனர் பால்ராஜ் மற்றும் முன்னாள் அதிகாரிகள் சி.சுந்தரம், ஜி.பாலசுப்பிரம ணியன், வி.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா.

பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், போக்குவரத்துக்கழக சிஐடியு நிர்வாகிகள் கார்த்திக், சாமி அய்யா, செந்தில்நாதன், பணியாளர் சங்க நிர்வாகிகள் ராஜசேகர், குழந்தைவேலு, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் இளங்கோவன், லோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top