Close
ஏப்ரல் 23, 2026 11:30 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக.30 -ல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள்

புதுக்கோட்டை

மக்களுடன் முதல்வர் திட்டம்

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் ஊரகப்பகுதிகளில் 11.7.2024 முதல் 10.9.2024 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம். இம்முகாம் 30.8.2024 அன்று கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

வளவம்பட்டி, கல்புடையான்பட்டி, சோச்சிப்பாளை, கல்லுக்காரன்பட்டி, வன்னாரப்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்பேரணி ஆகிய ஊராட்சிகளுக்கு ஆதனக்கோட்டை ஸ்ரீ லெட்சுமி திருமண மஹாலிலும்,

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களா கோவில் சமுதாயக் கூடத்திலும்,

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் முகாம்கள்  நடைபெற உள்ளது.

மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top