Close
ஏப்ரல் 24, 2026 12:56 காலை

கோவையில் 3 மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கங்கா மருத்துவமனை, ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கற்பகம் மருத்துவமனைக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோவை மாநகர காவல் துறையினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் படைகளை (BDDS) மருத்துவமனைகளுக்கு அனுப்பி சோதனை நடத்தினர்.

மேலும்  இது வழக்கமான புரளி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் என்று கூறி, பீதி அடைய வேண்டாம் என்று மருத்துவமனை அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு புரளி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் என்பதால் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. புரளி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியவரைப் பிடிக்க  24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

கோவையில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியவர்களை பிடிக்க கோவை நகர சைபர் கிரைம் போலீசார் மற்றும் கோவை ஊரக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்நியர் தனது ஐபி முகவரி மற்றும் இருப்பிடங்களை மறைக்க ‘டோர்’ என்ற உலாவியைப் பயன்படுத்தியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். புரளி வெடிகுண்டு மிரட்டலை முறியடிப்பதற்காக இளைஞர்களுக்கு ஹேக்கத்தான் நடத்த நகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top