Close
ஏப்ரல் 23, 2026 11:33 மணி

மழையில் சேதமான சாலை – புகார் அளித்தும் பயனில்லை : பொதுமக்கள் புகார்..!

மழைக்கு சேதமாகி இருக்கும் சாலை

மழையில் சேதமடைந்த கிராம சாலைகள் சீரமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார்.

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து புங்கம்பட்டி, முப்புலியூர், சேர்வைக்காரன் பட்டி, கேழையாபுலியூர்,வள்ளியம்மாள் புரம், கட்டேரிபட்டி,கருத்தலிங்கபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக செல்லும் கிராம சாலையானது திருநெல்வேலி தென்காசி பிரதான சாலையில் இணைகின்றது. இந்தச் சாலை வழியாக தினமும் இந்த கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் வேலைநிமித்தமாக பலர் இந்த சாலையில் பயணிக்கின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த சாலை சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மயிலப்பபுரம் முதல் வெங்கடாம்பட்டி வரை உள்ள சாலை நன்றாக உள்ளது.

ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தங்களது தேவைக்காக அந்த சாலை மீது மீண்டும் சாலை அமைக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தும் சிதலமடைந்த சாலைகளை சீரமைக்க மறுக்கின்றனர். விரைவில் இந்த சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top