Close
ஏப்ரல் 24, 2026 5:45 காலை

சுற்றுசூழல் பாதிப்பு: எறுமையூரில் 36 கிரஷர்களின் மின் இணைப்பு துண்டிப்பு..!

மின் துண்டிப்பு பணி

எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷர்களால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக 19 கிரஷர்களின் மின் இணைப்புகளை அதிகாரிகள் நேற்று துண்டித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட எருமையூர் பகுதியில் சுமார் 36 தனியார் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த கிரஷர்களில் ஜல்லி கற்கள், எம்.சான்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எறுமையூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கிரஷர்களால், எறுமையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்று சூழல் பாதிப்படைவதாக கூறி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எறுமையூரில் இயங்கி வரும் தனியார் கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்க அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி கனிமவளத்துறை, வருவாய் துறை, காவல்துறை, சுரங்கத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் என அரசுத்துறை அதிகாரிகள் எறுமையூரில் செயல்பட்டு வரும் தனியார் கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்கும் பணியில் நேற்று (சனிக்கிழமை) ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கிரஷர்களில் ஆய்வு மேற்கொண்டு முதற்கட்டமாக சனிக்கிழமை 19 கிரஷர்களின் மின் இணைப்பு துண்டித்துள்ளோம், ஞாயிற்றுக்கிழமை இன்றும் மின் இணைப்பு துண்டிக்கும் பணி நடைபெறும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top