Close
ஏப்ரல் 24, 2026 1:04 காலை

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள முகமது அப்துல்லா.

நாமக்கல்:

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எருமப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா, இவர் ஏற்கனவே, கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக, நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோர்ட் உத்தரவின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், மீது 3 வழிப்பறி வழக்குகளும், 3 கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர் நாமக்கல் பகுதியில் பெற்றோர் அரவணைப்பில் இல்லாத மாணவர்கள் மற்றும் இளைஞர்களை, கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, மூளை சலவை செய்து, அவர்களை கஞ்சா விற்க பயன்படுத்தி வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையொட்டி, நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், ஏடிஎஸ்பி தனராசு ஆகியோர் பரிந்துரையின் பேரில், முகமது அப்துல்லாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த சிறையில் அடைக்க, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சேலம் மத்திய சிறைக்கு சென்று அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து அதே சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top