Close
மார்ச் 7, 2026 2:05 மணி

பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மேற்கண்ட பிரிவைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS எண் மூலம் umis.tngov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அனுகி இந்த வெப்சைட்டில் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மாணாக்கர்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை சந்திக்கலாம் என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top