Close
மார்ச் 7, 2026 4:27 மணி

விசைத்தறிகளை நவீனப்படுத்த அரசு ரூ. 50 கோடி மானிய நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 50 கோடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 2025-2026ம் ஆண்டிற்கான, விசைத்தறிகளை நவீனமயமாக்குதல் திட்டம் மூலம், விசைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.50 கோடி மானியமாக வழங்குகிறது.

இத்திட்டத்தின்படி, ஆண்டு தோறும் 3,000 விசைத்தறிகளை நவீனமாக்கும் வகையில் ரூ. 30 கோடி நிதியும், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவும் வகையில் ரூ. 20 கோடி என, மொத்தம் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் பழைய சாதா விசைத்தறிகளை நவீனப்படுத்துதல், புதிய நாடா இல்லாத ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்தல், பொது வசதி மையம் நிறுவுதல், வார்ப்பிங் மற்றும் சைசிங் ஆலைகள், தரப்பரிசோதனை மையங்கள், மாதிரிகள் உற்பத்தி மையம், வடிவமைப்பு மையம் போன்றவை அமைக்கலாம்.

விருப்பமுள்ள நபர்கள் tnhandlooms.tn.gov.in/pms என்ற வெப்சைட் முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விபரங்களுக்கு, குமாரபாளையம் ஈகாட்டூர், எலந்தகுட்டையில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top