தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் தனியரசு உத்தரவின் பேரில், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட இளைஞர் பேரவை சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் தெற்கு மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட இளைஞர் பேரவை செயலாளர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவெக கட்சி தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளை ஏமாற்றியுள்ள தவெக அரசைக் கண்டித்தும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கொங்கு இளைஞர் பேரவையினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.




