Close
ஜூலை 7, 2026 12:50 காலை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை, நாவக்கரை மற்றும் பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டதுடன் பொதுமக்களிடமும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க, பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்து, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தேடி பிடித்து கைது செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
பொறுப்பேற்றுள்ள உதயகுமார், கடந்த சிலதினங்களாக போதைபொருட்கள் புழக்கம் உள்ள இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட நாவக்கரை பகுதியில் 100க்கும் போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைபொருட்கள் பயன்பாடு உள்ளதா? அதேபோல் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா? உள்ளிட்ட பல்வேறு கட்ட சோதனையை மோப்பநாய் தென்றல் உதவியுடன் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் தற்போது வரை அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, பப்லு ஆகிய இருவரை போதைப்பொருள் விற்பனை செய்ததாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் இங்கிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சப்ளை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top