Close
ஜூலை 31, 2026 8:42 மணி

ஆடிக்கிருத்திகை திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் பேசிய எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆகஸட் 6ம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழாவை நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக சட்டமன்றக் கட்சி கொறடா, கலசபாக்கம் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, அனைத்து துறை அலுவலர்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், பழனிராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் வசந்தி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது: வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருகைதர வாய்ப்புள்ளதால், கடந்த ஆண்டைவிட அதிகளவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ,

காவல்துறை சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் மாடவீதிகளில் உரிய அனுமதி பெற்ற கடைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிக ஸ்டால்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிநீர், கழிவறை, மொபைல் கழிவறை, குளியலறை, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட சுகாதார வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும்,  விழா நடைபெறும் 5, 6, 7 ஆகிய நாட்களில் தெருவிளக்குகள் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் மின்சார வாரியத்தின் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்கவேண்டும், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவத்துறை மூலம் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து முதலுதவி வசதிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

போளூர், திருவண்ணாமலை, செங்கம், மேல்சோழங்குப்பம், கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நட்சத்திர கோவிலுக்கு கூடுதல் பேருந்து வசதிகள் இயக்கப்பட வேண்டும் என்றும் அதேபோல் கார், வேன், இருசக்கர வாகனங்களுக்கு போதிய வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பக்தர்கள் குளத்தில் கை, கால் அலம்பும் இடங்களில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜூலு, தனி தாசில்தார் தேன்மொழி, வட்ட வழங்கல் அலுவலர் பொன்விழி, காவல் ஆய்வாளர் நாகராஜன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முருகன், சுப்ரமணி, பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் விஜய், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top