Close
ஆகஸ்ட் 18, 2026 6:09 காலை

தென்காசியில் சோனியா காந்தியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை கண்டித்து  தென்காசி மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகே, பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன்.மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வந்தே மாதம் பாடலை சோனியா காந்தி அவமதித்ததாகக் கூறி, நாடு முழுவதும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தென்காசியிலும் இன்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர், காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்திக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஏராளமான கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top