Close
ஆகஸ்ட் 18, 2026 6:15 காலை

தென்காசியில் முரசொலி மாறனின் 93-வது பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், கழகத்தின் மூத்த தலைவருமான முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து, முரசொலி மாறன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முரசொலி மாறன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாகவும், கழகத்தின் முக்கியமான அறிவுசார் ஆளுமையாகவும் விளங்கியதுடன், மத்திய அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பாகப் பணியாற்றியதை நினைவுகூர்ந்து கழகத்தினர் புகழஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் அழகுசுந்தரம், மேலகரம் பேரூர் துணைச் செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மஹ்முதா, துணை அமைப்பாளர் கதிர், ஐ.டி.ஐ. ஆனந்த், செங்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அழகுத்தமிழ் சங்கர்,

மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் சூர்யா சுப்பிரமணி (எ) ஈஸ்வரன், ஊர்மேலழகியான் சுப்பிரமணியன், மாவட்ட கலை இலக்கிய அணி கருப்பண்ணன், மாவட்ட நெசவாளர் அணி இலஞ்சி சண்முகநாதன், கஜேந்திரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ், சபீக் அலி, முத்து சுப்பிரமணியன், வல்லம் செல்வம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஆதித்தமிழர் கட்சி பொதிகை ஆதவன், தென் தமிழரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top