Close
ஆகஸ்ட் 18, 2026 6:11 காலை

புதுக்கோட்டையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம்!

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல்வேறு ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உடல் உறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அப்துல் ரகுமான் (சேட்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிட்டி ரோட்டரி சங்கப் பொருளாளர் கண.மோகன்ராஜா வரவேற்புரையாற்றினார். புதுகை வெற்றி ரோட்டரி சங்கத் தலைவர் சோமசுந்தரம் ரோட்டரி பிரார்த்தனையை வாசித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

வாழ்த்துரையும் விழிப்புணர்வும்:
கல்லூரி முதல்வர் திருமதி நிர்மலா, இருதய நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சுதர்சனன் மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்கள் உரை:

புதுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி பிருந்தா மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அவர்கள் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் பிற உயிர்களைக் காக்கும் உயரிய நோக்கம் குறித்து சிறப்புரையாற்றியதுடன், மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.

திரளானோர் பங்கேற்பு:

இந்நிகழ்வில் புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் தினேஷ், மேனாள் தலைவர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மெட்ரோ ரோட்டரி சங்கத் தலைவர் ஹரிஹரசுதன், புதுகை வெற்றி ரோட்டரி சங்கச் செயலாளர் (பொறுப்பு) அண்ணாமலை, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுமார் 400 மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேனாள் தலைவர் குட்லக் முஹம்மது அப்துல்லா, மேனாள் செயலாளர் சங்கர் மற்றும் NSS ஒருங்கிணைப்பாளர்கள் திறம்படச் செய்திருந்தனர். மாஸ்டர் சேது கார்த்திகேயன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இறுதியில், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூற, கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top