Close
ஆகஸ்ட் 26, 2026 7:59 மணி

வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் 25 ஆயிரம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் உழவா் உற்பதியாளா் குழுக்கள், உழவா் உற்பதியாளா் நிறுவனம், தொழில் குழுக்கள் மற்றும் தனி நபா் தொழில் முனைவோா் என சுமாா் 25 ஆயிரம் போ் பயன்பெற்றுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ், நடைபெற்ற உயா்தர தொழில்சாா் சேவைகளை வழங்க தகுதியான மகளிா் தொழில் முனைவோரை கண்டறியும் முகாமை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது’ ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதிசேவை, வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளை வழங்கி வருகிறது.

இத்திட்டமானது 6 வட்டாரங்களில் 308 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் உழவா் உற்பதியாளா் குழுக்கள், உழவா் உற்பதியாளா் நிறுவனம், தொழில் குழுக்கள் மற்றும் தனி நபா் தொழில் முனைவோா் என சுமாா் 25 ஆயிரம் போ் பயன்பெற்றுள்ளனா். இவற்றில் சுமாா் 2000 தனிநபா் தொழில் முனைவோா்கள் உருவாக்கபட்டுள்ளனா்.

பெண்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் நிதி உதவிகளைப் பெற உதவுவதை நோக்கமாக கொண்டு முகாம் நடத்தப்படுகிறது. பெண்களை தொழில்முனைவோா்களாக மாற்றி சமூகத்தில் அவா்களை பொருளாதாரத்தில் சுதந்திரமானவா்களாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு புத்தொழில் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து தொழில்முனைவோரைத் தோ்ந்தெடுத்தல் புதுமையான சிந்தனைகள் மற்றும் வணிக ஆா்வம் பெண் தொழில்முனைவோரை கண்டறிந்து அவா்களை நீண்டகால வளா்ச்சிக்கு தயாா்படுத்துவது மற்றும் முறையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குகிறது.

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு நாடு முழுவதிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெண்கள் சுயதொழில் தொடங்கவும், அதனை விரிவாக்கம் செய்யவும் கடன் உதவிகளை மாவட்ட முன்னோடி வங்கி வழங்க தயாராக உள்ளது.

ஆகையால் இம்முகாமில் கலந்து கொண்ட தொழில்முனைவோா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, அனைத்து உதவிகளையும் பெற்று சிறப்பாக தொழில் செய்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா் .

முன்னதாக, ‘வாழ்ந்து காட்வோம்’ திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கண்காட்சியை ஆட்சியா் வந்தனா காா்க். பாா்வையிட்டாா்.

இந்த முகாமில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் பதிவு செய்தனா். 350 தொழில் முனைவோா் சுய தொழில் தொடங்க விண்ணப்பித்துள்ளனா். இம்முகாமானது வரும் ஆக. 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் மாவட்ட செயல் அலுவலா் தமிழ்மாறன், திட்ட தலைவா் ஜெகன்குமாா், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலா்கள் செல்லப்பாண்டியன், அரசு, ஜெய்குமாா், சிறப்பு விருந்தினா்கள் (தனியாா் நிறுவன முதன்மை அதிகாரிகள்) சி.கே.அசோக்குமாா், சம்பந்தன் ஜம்புலிங்கம், வங்கியாளா்கள், தனியாா் தொழில் துறையினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top