நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, வலையப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கப்பட்டன.
நாமக்கல் கொமதேக மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரனின், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், வலையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 50 பெஞ்ச் மற்றும் 50 டெஸ்க் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி புதிய பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது. மாதேஸ்வரன், எம்.பி., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாணவ மாணவிகளுக்கு பெஞ்ச், டெஸ்க்குகளை வழங்கினார்.
கொமதேக மாநில செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சசிகுமார், இணை செயலாளர் தமிழரசு மற்றும் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.




