Close
செப்டம்பர் 12, 2026 6:06 மணி

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விக்ரம் புவி சாட்டிலைட் தயாரிப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், காலநிலை மாற்றத்தை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்யும் வகையில், விக்ரம் புவி செயற்கை கோள் தயாரிப்புப் பயிற்சி முகாம் நடந்தது.

அரசு பள்ளி ஆசிரியர் கவுதமி வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

தற்காலத்தில், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் சென்சார்கள், மனித உடலின் உணர் உறுப்புக்களை போல் செயல்படுகின்றன. வெப்பம், ஒளி, அழுத்தம். அசைவு போன்ற இயற்பியல் மாற்றங்களைக் கண்டறிந்து, அவற்றை எலக்ட்ரானிக் சிக்னல்களாக மாற்றி, சாதனங்கள் இயங்க உதவுகின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், மீத்தேன், காற்றின் தூய்மை போன்றவற்றை அளவிடும் சென்சார்கள், விக்ரம் புவி சாட்டிலைட்டில் பொருத்தப்பட்டுள்ளதால், சுற்றுப்புறச் சூழலில் நிகழும் காலநிலை மாற்றத்தை உணரும் கருவியாக இது செயல்படும்.

இந்த செயற்கை கோளின் பயன்பாட்டால், ஆசியர்கள் சுற்றுச்சூழலில் ஆராய்ச்சிகளை செய்து, காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிப்பார்கள் என கூறினார்.

பாரம்பரிய செயற்கை கோள்களை போல் இல்லாமல், சென்சார் தொழில்நுட்பங்களைக் கொண்டு, குறைந்த செலவிலான செயற்கை கோள்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் காலநிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் வகையில், பூமிக்கு மிக அருகில் ஆசிரியர்களுடன் பயணம் செய்யும் சாட்டிலைட் கருவி விக்ரம் புவி சாட்டிலைட்டை என்ற பெயரில் சேலம் ஸ்டெம் வல்லுனர் அருளானந்தம் முயற்சியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்லோ எஜூசாட் நிறுவனர் மோகன்குமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன், தர்மபுரி, அரசு கலைக் கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் துறை உதவிப் பேராசிரியர் வெண்ணிலா மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top