Close
மே 12, 2024 3:00 காலை

தொழில் முனைவோர் ஆவது எப்படி.. அரசு ஐடிஐ -ல் கருத்தரங்கம்

புதுக்கோட்டை

புதுகை அரசு ஐடிஐ-ல் தமிழக அரசின் திட்டமான தொழில் முனைவோர் ஆவது எப்படி என்ற கருத்தரங்கம் நடைபெற்றது

தொழில் முனைவோர் ஆவது எப்படி  என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  கருத்தங்கம் நடைபெற்றது.

தமிழக அரசின் திட்டமான தொழில் முனைவோர் ஆவது எப்படி என்ற கருத்தரங்கு முதல்வர் சுந்தர கணபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாருதி கார் கேர் நிறுவன நிறுவனத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜா கலந்துகொண்டு, இன்றைய இளைஞர்கள் தொழில் தொடங்க என்ன மாதிரியான அரசு நலத் திட்டங்கள் இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் அனீஸ் இப்ராஹிம்பாபு கலந்துகொண்டு, தொழில் முனைவர் ஆவதற்கு அரசின் உதவிகள் வங்கி கடன்கள் மாவட்ட தொழில் மையத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி ஒருங்கிணைத்தார். நிறைவில் உதவி பயிற்சி அலுவலர் முருகேசன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top