Close
மே 20, 2024 9:21 மணி

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓயாத அலைகள் அறநிலையம் சார்பில் உதவி வழங்கல்

புதுக்கோட்டை

திருவப்பூரில் நேரிட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓயாத அலைகள் அறநிலையம் சார்பில் உதவிப்பொருள்கள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் புரத்தில் மூன்று வீடுகள் சமீபத்தில் தீக்கிரையானது இவ்விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருண்மொழியின் ஓயாதஅலைகள் அறக்கட்டளை சார்பாக ஒருமாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைபொருட்கள், காய்கறிகள் , உணவு சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கநிறுவனத் தலைவர் கண.மோகன்ராஜா, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோ.கண்ணன், பரமசிவம், சுரேஷ்குமார் பெ.மு.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top