Close
மே 15, 2024 4:51 காலை

விஜயரெகுநாதபுரம் அரசு  பள்ளியில் குறுங்காடு அமைத்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம்

புதுக்கோட்டை

விஜயரெகுநாதபுரம் அரசு  பள்ளியில் குறுங்காடு அமைத்த புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் விஜய ரெகுநாதபுரம் அரசு  பள்ளியில் குறுங்காடு அமைக்கும்  நிகழ்வு நடைபெற்றது
புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் விஜய ரெகுநாதபுரம் அரசு  பள்ளியில் குறுங்காடு அமைக்கும் நிகழ்வு   நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்க தலைவர் முனைவர் லட்சுமி அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மண்டல செயலாளர்  விஆர்.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் ரோட்டரி மண்டல செயலாளர்{ திட்டம் }  ஜி. எஸ். எம். சிவாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை பள்ளி வளாகம் முழுவதும் விதைக்கலாம்அமைப்பின்  நிர்வாகிகள் முன்னிலையில் 80-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில்  பள்ளியின்  தலைமை ஆசிரியர் சுகந்தி ஜூலியானா மற்றும் ஆசிரியர் வி.எம். பாஸ்கர்மற்றும் கைக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் ரெங்கநாயகி,  நீர்ப்பாசன சங்கத்தலைவர் சுப .செல்வம் ,விதைக்கலாம் சங்கத்தின் நிர்வாகிகள் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர். குறுங்காடு அமைக்க   மரக்கன்று நடும் நிகழ்வை  அனைவரும் பாராட்டினர்.

 நிறைவாக மகாராணி ரோட்டரி சங்கத்தின்  செயலாளர் கே. கலாகிருஷ்ணன்  நன்றி  கூறினார். இந்நிகழ்ச்சியில் மகாராணி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top