Close
மே 11, 2024 10:39 காலை

பெருங்குடியில் சுகாதார வளாகம் திறப்பு

புதக்கோட்டை

பெருங்குடியில் சுகாதார வளாகத்தை திறந்து வைத்த அரிமளம் ஒன்றியக்குழுத்தலைவர் மேகலாமுத்து

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியிலுள்ள சமுதாய கூடத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

பெருங்குடி சமுதாயக்கூடத்தில் 15 -ஆவது நிதிக்குழு மானியம் ரூ. 5.86 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகத்தை அரிமளம் ஒன்றியக் குழுத்தலைவர் மேகலாமுத்து திறந்து வைத்தார்.

இதில், அரிமளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பொன். ராமலிங்கம், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.ஆர். இளையராஜா, பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் க. ராஜேந்திரன், துணைத்தலைவர் ராஜேந்திரன், அரசு ஒப்பந்ததாரர் சின்னத்தம்பி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியராஜ், ஊராட்சி செயலாளர் கருப்பையா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top