Close
ஏப்ரல் 23, 2026 11:26 மணி

பொன்னமராவதி காவல்நிலையத்தில் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆய்வு

பொன்னமராவதி

பொன்னமராவதி காவல்நிலை வளாகத்தில் மரக்கனறு நட்டு வைத்தா எஸ்பி நிஷாபார்த்திபன்

பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். பொன்னமராவதி காவல் நிலையத்தில் உள்ள கைதிகள் அறை, ஆயுத அறை, புகார் சம்பந்தப்பட்ட  ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தும், காவல் உதவி ஆய்வாளர் கணேசனுக்கு தகுதிகான் பருவம் முடிவடைந்ததையும்,வழக்குகளை, மனுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்  கேட்டறிந்தார். முன்னதாக காவல் நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு, டிஎஸ்பி அப்துல் ரகுமான் மற்றும் காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவலர்கள் அணிவகுப்பு  மரியாதை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top