Close
மே 20, 2024 2:31 மணி

பொன்னமராவதி பகுதியில் மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி…

பொன்னமராவதி

பொன்னமராவதி பகுதியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

பொன்னமராவதி பகுதியில் இடி மின்னல் காற்றுடன் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி பகுதிகளில் சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் மதியம் வரை வெயில் வாட்டி வதக்கியது.

பொன்னமராவதி சுற்றுவட்டாரபகுதிகளான கொன்னையூர் கொப்பனாபட்டி பொன்னமராவதி பேருந்து நிலையம் வேந்தன்பட்டி,கண்டியாநத்தம், ஆலவயல், அம்மன்குறிச்சி, நகரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் காற்று, இடி,மின்னலுடன் திடீரென மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது‌. இதனால்  கடந்த பல நாள்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்தது.
கடுமையான வெப்பத்தின் காரணமாக விவசாயிகள் தங்கள் வயல்களில் பயிரிட்டிருக்கும் மிளகாய், கத்தரி வெண்டைக்காய் உள்ளிட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது நீர் ஆவியாவதால் முழுமையாக நீர் பாய்ச்ச அதிக நேரம் தேவைப்பட்டது. மேலும் பொதுமக்களும் மதிய நேரங்களில் அதிக வெப்பநிலை நிலவியதால் வெளியே நடமாட மிகவும் சிரமப்பட நேரிட்டது. இம்மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top