Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக-காங்கிரஸ் தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 15 -ஆவது வார்டு தேர்தல் பணிமனையை அமைச்சர் கே.என்.நேரு  திறந்து வைத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சூரியம்பாளையம் பகுதி 15வது வார்டு அன்னை சத்யா நகர், அஜந்தா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்காக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா  நடைபெற்றது.

விழாவிற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் அன்பில்மகேஸ்பொய்யாமொழி, நாசர், ராமச்சந்திரன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்  திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் அஜந்தா நகர், அன்னை சத்யா நகர் பகுதிகளில் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top