Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

கராத்தே பட்டை வழங்கும் நிகழ்வில் அசத்திய மாணவர்கள்…

ஈரோடு

ஈரோடு மாவட்ட ஜித்தோகுகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு கலர் பட்டை தேர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

ஈரோடு மாவட்ட ஜித்தோகுகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு கலர் பட்டை தேர்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் 10 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை காட்டி அசத்தினர். 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வயது வாரியாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவியர்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, கருப்பு வண்ணங்களில் பட்டைகளை சீனியர் மாஸ்டர் கே.ஆர். மாணிக்கவாசகம், ஈரோடு மாவட்ட கராத்தே சங்க செயலாளர் சக்திவேல் ஆகியோர் வழங்கினர்.

ஈரோடு
பட்டை வழங்கும் விழாவில் பங்கேற்ற மாணவர்கள்

ஈரோடு மாவட்ட ஜித்தோகுகாய் செயலாளர்  மணி மற்றும் செம்பை பி.பூர்ணிமா தேவி, செம்பை எஸ்.காசி விசாலாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய ஜித்தோகுகாய் துணை செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட கராத்தே சங்க செயலாளர்
ஏ. சக்திவேல் செய்திருந்தார்.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top