Close
செப்டம்பர் 20, 2024 7:40 காலை

காலிப்பணியிடங்களை நிரப்பிட அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி.

புதுக்கோட்டை
அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய கோரிக்கை விளக்கக்கூட்டம்

மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள், துணைத் தலைவர் பி.சந்திரா, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம்.ரேவதி உள்ளிட்டோர் பேசினார்.

கூட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்றுத்துறைப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அதிகாரிகளின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட அம்சவள்ளி என்ற பணியாளரின் குடும்பத்திற்கு நியாயம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top