Close
அக்டோபர் 5, 2024 10:32 மணி

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக இணைந்த திமுக, அமமுகவினர்..

ஈரோடு

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கோபி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக மற்றும் அமுமுக நிர்வாகிகள்  அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் சசிகுமார், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வடிவேல், புதுக்கரைப்புதூர் அவை தலைவர் ஈஸ்வரன் மற்றும் பி. எல். ஓ. ராமசாமி, வெள்ளாளபாளையம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி,அமுமுக எல்லமடை கிளைச் செயலாளர் முருகேசன், பாரதிராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்கள் அனைவருக்கும் கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான கே ஏ செங்கோட்டையன்  அதிமுக கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மவுதீஸ்வரன், அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்வேலுமணி, நஞ்சை கோபி, ஊராட்சி மன்ற தலைவர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top