Close
அக்டோபர் 5, 2024 10:28 மணி

குழிபிறை ஊராட்சியில் 866 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

புதுக்கோட்டை

குழிபிறையில் நடைபெற்ற நிகழ்வில் பொங்கல் தொகுப்பு வழங்கிய ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன்

திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப் பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக் குள்பட்ட குழிபிறை ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவர் எஸ். அழகப்பன் தலைமையில் துணைத்தலைவர் பழ. நாச்சம்மை முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், குடும்ப அட்டைதாரக்கள் 866 பேருக்கு அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 வழங்கப்பட்டது.

இதில், வார்டு உறுப்பினர்கள் ஏ.நாச்சம்மை, எஸ். பொன்னழகி, ரேவதி. பழனியப்பன், கலா, நாகப்பன், முருகப்பன், ராசு, ஊராட்சிச்செயலர் யோகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top