Close
செப்டம்பர் 20, 2024 5:36 காலை

திருச்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டப்போட்டி

முன்னாள் முதல்வர் கருணாநிதி  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.சா சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடிதிருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக தொ.மு.ச சார்பில்  நடைபெற்றது.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தொமுச பொதுச் செயலாளர் கணேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார்.

மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கழகத் துணை பொதுச் செயலாளர் கா. பொன்முடி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் மராத்தான் போட்டியில் 8வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ ,மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும் இதனையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், மேலும் தொமுச நிறுவுவதற்கு கலைஞர் அரும்பாடு பட்டதாகவும், முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன், ஊதியத்தையும் வழங்கியவர் கலைஞர் தான் என்றும் எனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடுவதில் தொ.மு.சவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விழாவிற்கு வந்திருக்கும் பொன்முடி வரவேற்பதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் முன்னோடிகள் என உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top