Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச தொடர் மருத்துவ முகாம்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் ஏ.சி.சண்முகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, புதிய நீதிக்கட்சியின் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் டி.ஸ்ரீதர், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணைச் செயலாளர் டி.குணசேகரன் வரவேற்றார். இம்முகாமில், பொது மருத்துவம், கண் மருத்துவம், இதய நோய் பரிசோதனை, சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இம்முகாமில், சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். முகாமில், கலந்துக்கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமில், குடியாத்தம் ஒன்றிய இணை செயலாளர் விஜி, சொக்கரிஷிக்குப்பம், கிளை தலைவர் சிவக்குமார். கிளை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top