Close
செப்டம்பர் 19, 2024 7:11 மணி

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

சிவகங்கை மாவட்ட  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 48 பயனாளிகளுக்கு
ரூ.08.70 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , இன்று (16.09.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 185 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்துநடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், 24 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.2,780/- வீதம் மொத்தம் ரூ.66,720/- மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும், 12 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.2,04,000/- மதிப்பீட்டிலான இயற்கை மரணத்திற்கான உதவித் தொகைக்கான ஆணைகளையும்,
மாவட்டத் தொழிலாளர் நலத்துறையின் சார்பில்,
12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6,00,000/- மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவித் தொகைக்கான ஆணைகளையும் என ,
ஆக மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.8,70,720/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வரசு
உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top