Close
அக்டோபர் 6, 2024 11:18 காலை

நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக சேதம்:  விரகனூர் பாலத்தில்  சீரமைப்பு பணி தீவிரம்

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனை இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி இணைப்பு சாலை வரை சுமார் 29 கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு சாலை வுட் கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பாக 2 வழி சாலையாக இருந்த இந்த பகுதி நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது
.
கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 213.69 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட இந்த விரிவாக்க பணி கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.
28 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் வண்டியூர் சிந்தாமணி வளையங்குளம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு,
வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வைகை ஆற்றை கடக்கும் வகையில் புதியதாக மேம்பாலம் அமைக்
கப்பட்ட நிலையில், அந்த மேம்பாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தற்போது சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மையப்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் பேருந்து வந்ததின் காரணமாக தற்போது கம்பிகளை அகற்றிவிட்டு புதிய கம்பிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பாலம் அதிக அளவு அதிர்வு ஏற்படுவதால் பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல நிலை ஏற்பட்டுள்ளது.
213 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை விரிவாக்க பணி தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டியில் அச்சத்தில் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top