Close
ஏப்ரல் 24, 2026 12:59 காலை

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் அண்ணாபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டது.

குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் மீனாட்சி அம்மனுக்கு அன்ன பாவாடை அலங்காரம் செய்து புளியோதரை வெள்ளை, சாதம், காய்கறிகள் கனி வகைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த பூஜையினை, பட்டர் கிருஷ்ண குமார் செய்தார். இதன் ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் சரண்குமார், சேசுகிருஷ் ணன்,ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.

குட்லாடம் பட்டியில், கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்புறத்தில் 36 அடி லிங்க வடிவிலான அண்ணாமலையார் தியான மண்டப கோவிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளும் காய்கறிகள், கனிகள் வைத்து  அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையினை, கிரிவல நாதர் கோபிநாத் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை, அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் ராஜேஸ்வரி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

செம்மினிபட்டியில், இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை அடிவாரத்தில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதீஸ்வரர் திருக்கோயிலில் ஜடாமுனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து காய்கறிகள் வைத்து அன்னாபிஷேக அலங்காரம்  செய்திருந்தனர்

இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜை மற்றும் ஏற்பாடுகளை ஆதி கொற்றவை அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆதி முத்துக்குமார் செய்திருந்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிள்ளையார் சிவன் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு பிழையான சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது அதைத்தொடர்ந்து அன்னாபிஷேகம் நடந்தது

பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை வழிபாடுகள் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் எம் பி எம் மணி கோவில் செயலாளர் இளமதி கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருது பாண்டியன் கோயில் கணக்கர்  பூபதி வசந்த் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்தனர்

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சௌபாக்கியவனே ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது இதே போல மதுரை அண்ணா நகர் யானை குழாய் முத்துமாரி ஆலயத்தில் உள்ள அழியாபதீஸ்வரருக்கும், மதுரை வைகை விநாயகர் வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை தாசில்தார்நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ.நகர் விநாயகர் ஆலயத்திலும், ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top