Close
மார்ச் 7, 2026 6:03 மணி

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், மக்களவை உறுப்பினா்கள் அண்ணாதுரை, தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2024-2025ம் ஆண்டுக்கான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின் கீழ், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக அவர்களின் நலனை காத்து உரிமையை நிலை நாட்டும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி வெளியில் செல்ல இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்டபெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் பேட்டரி கார்  வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி சுதாகா், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top