Close
ஜூன் 6, 2025 3:44 மணி

சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கோப்பு படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்த்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்,  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 127 குழந்தைகள் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, 2 முதல் 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல் கதை, விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா என்ற சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைபடுத்தப்படுகிறது.

மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தம் செய்யப்படுகின்றனா். அங்கன்வாடி பணியாளா்கள் இப்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனா்.

எனவே, பெற்றோா்கள் தங்களது 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதாா் அடையாள அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், இந்த சேவையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு  தெரிவித்துள்ளாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top