Close
ஏப்ரல் 23, 2026 11:26 மணி

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் விழா கூட்டுறவு பயிற்சி துவக்க விழா

மண்டல இணைப்பதிவாளர் அருளரசு கலந்துகொண்டு, பயிற்சியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அஞ்சல் விழா கூட்டுறவு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் சேலம் ரோட்டில் அமைந்துள்ள, மாவட்ட கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2024-2025 ஆம் ஆண்டின், நிரந்தர பணியாளர்களுக்கான 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு விழாவில் கலந்துகொண்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்து வகுப்புகளை துவக்கி வைத்தார். பின்னர், பயிற்சி குறித்து பேசிய அவர், பயிற்சியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணைப்பதிவாளர் மற்றும் பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், விரிவுரையாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், விவேகானந்தர், சிவசுப்பிரமணி, சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top