திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டடு, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண் டி ல் (2025-2026), உயர் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30.5.2025 அன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் மு.கஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து உயர்கல்வித்துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர் மாவட்டம் கே.வி குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருவண்ணாமலைமாவட்டம், செங்கம் நகராட்சியில் புதிய அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெகிரி, பெ.சுதிசரவணன் ஆகியோர் நேரலையில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.
செங்கம் நகராட்சியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு 5 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ,மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.




