Close
மார்ச் 7, 2026 8:01 மணி

திருநங்கைகளுக்கு சிறப்பு நல திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்  நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

இந்தியாவிலேயே முதன்முறையாக 2008-ஆம் ஆண்டு தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டது.

நல வாரியத்தின் மூலம் திருநங்கை, திருநம்பி இடை பாலினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் தொடங்க மானியத் தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத்தொகை காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்க ஏதுவாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்படுகின்றன என்றாா்.

முகாமில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.

இம்முகாமில் மாவட்ட சமூகநல அலுவலர், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), மாவட்ட திறன் பயிற்சி அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவன மேற்பார்யைாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top