Close
மார்ச் 7, 2026 6:03 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கு நாட்டுக் கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிளான (250 கோழிகள்/அலகு) நாட்டுக் கோழிப்பண்ணைகள் நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்த திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 10 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ.1,65,625 மாநில அரசால் வழங்கப்படும்,

திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும் , ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்,

பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 6 25 சதுரஅடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்

மேலும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட/ பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நாட்டுக் கோழிவளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்க கூடாது,

கட்டுமான பணிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள பயனாளிகளை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறமையும் ஆர்வமுள்ள பயனாளிகள் மேற்காணும் அரசு விதி முறைகளின்படி தகுதியிருப்பின் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் 30.06.2025 க்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் .

விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் அட்டைநகல் பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50 சதவித தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கிகடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23,2023- 24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நாட்டுக் கோழிவளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் தங்களது விண்ணப்பங்களை அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களிடம் 30.06.2025 தேதிக்குள் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top