கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்களே ஆன நிலையில், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை கட்டிடங்கள் உடைந்து வருவதை மாதேஸ்வரன், எம்.பி. கண்டித்தார்.
நாமக்கல் முதலைப்பட்டியில், மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் புதிய பேருந்து நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேருந்து நிலைய கழிவறைகளில் சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுவதை கண்டார்.
இதையொட்டி அவர், மாநகராட்சி ஆணையர் சிவகுமாரை தொடர்புகொண்டு, புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை உடனடியாக சீரமைக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் கொமதேக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




