நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பொது நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பொது நல அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
13ம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா அறக்கட்டளை தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
அறக்கட்டளை செயலாளர் இளங்கோ, பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர் நடராஜன், இணை செயலாளர் பாபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




